For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கால்டைகர் நிறுவனத்துடன் ஸெட்நெட் இந்தியா ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியாவிலேயே பெரிய தனியார் துறை இன்டர்நெட் சேவை நிறுவனமான கால்டைகர் நிறுவனத்துடன் ஸெட்நெட் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்த தொழில்முறை ஒப்பந்தம் மூலம் பதிவுபெற்ற கால்டைகர் உபயோகிப்பாளர்களுக்கு தொழில்நுட்ப உதவியையும், சேவையையும் ஸெட்நெட்இந்தியா நிறுவனம் வழங்கும்.

கால்டைகர் நிறுவனம் இந்தியாவிலேயே இன்டர்நெட் சேவை அளிக்கும் தனியார் நிறுவனங்களிலேயே மிகப் பெரியதாகும்.

இந் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நபர்கள் இன்டர்நெட் இணைப்பைப் பெற்று வருகின்றனர்.

இப்போது ஸெட்நெட் இந்தியா நிறுவனத்துடன் கால்டைகர் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதை அடுத்து இவர்கள் அனைவருக்கும் தொழில்நுட்பஉதவியும், சேவையும் கிடைக்கும்.

1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கால்டைகர் நிறுவனத்தில் தற்போது 2.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 13 நகரங்களில் இந் நிறுவனத்தினகிளைகள் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X