For Daily Alerts
Just In
ரங்கராஜன் மறைவுக்கு ராஜ்ய சபாவில் இரங்கல்
டெல்லி:
டெல்லியில் மரணமடைந்த மின்சாரத் துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்திற்கு ராஜ்யசபாவில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். ராஜ்யசபா தலைவர் கிருஷ்ண காந்த் தனது இரங்கல் செய்தியில்,திறமையான அமைச்சரை நாம் இழந்துவிட்டோம். சிறந்த நிர்வாகத் திறமை மிக்க ரங்கராஜன் தனி மனிதனின் பிரச்சனையில் கூட பங்கேற்கும்நல்லுள்ளம் படைத்தவர் என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் புதன்கிழமை அதிகாலை இறந்தது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, August 24, 2000, 5:30 [IST]