For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, குமரியில் வெள்ள அபாயம்

By Staff
Google Oneindia Tamil News

இருக்கிறார்கள்.

ஆனால், இதுகூட தமிழக முதல்வருக்குப் பெருமையாக இருக்கலாம். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக,வீரப்பனுக்குப் பாதுகாப்பு அளித்து, அவனுடைய மெய்க்காப்பாளராக இருந்தவர் ஆயிற்றே! பி.ஏ. பதவிப்ரமோஷன்தானே!

ஜெயலலிதா கூறியதற்கு பதிலடி கொடுத்து விட்டார்கள். சரி. ஜனாதிபதியும் இரு மாநில அரசுகளை ஒரு குட்டுகுட்டியிருக்கிறாரே! அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்? அதுதான் போகட்டும்.

ஜெயலலிதா அறிக்கையில் உள்ள பல கருத்துக்கள் மக்கள் மனதிலும் இருக்கிறதே? மிகப்பெரிய கேவலம் நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து மக்கள் மனம் வெதும்பி இருக்கிறார்களே? இதற்கென்ன செய்வது?இதற்கென்ன பதிலடி?

விவகாரம் இதோடு தீரப்போகிறதா? ராஜ்குமார் மீட்கப்பட்டு விடுவார் என்றுதான் நாம் நம்புகிறோம் - ஆனால்அதற்குப் பிறகு கர்நாடகத்தில் என்ன நடக்குமோ? வீரப்பனுடைய விபரீதக் கோரிக்கைகளைப் பார்த்து தமிழகமுதல்வர் புளகாங்கிதம் அடைந்தார்;

அவனுடைய தமிழ்த் தீவிரவாதம் வரவேற்கத்தக்கதுதான் என்று பாராட்டினார்; அவனுடைய கருணைஉள்ளத்தையும் நினைத்துப் பார்த்து மனம் நெகிழ்ந்து பேசினார் - இத்தனையும் ராஜ்குமார் அவனிடம் சிக்கி இருந்தநிலையில்! கன்னட வெறியர்கள் இதையெல்லாம் கவனிக்காமலா இருந்திருக்கப் போகிறார்கள்?

ஜெயலலிதாவின் அறிக்கை கர்நாடகத் தமிழர்களை ஆபத்துக்குள்ளாக்கக் கூடியது என்று கூறுகிறார் கருணாநிதி.அதுவல்ல உண்மை. இவர் வீரப்பனை புகழ்ந்ததுதான் கர்நாடகத்தில் எரிச்சலை உண்டாக்கி இருந்திருக்கும்.

இது ஒருபுறமிருக்க வீரப்பனுடைய தீவிர தமிழ்வாதம் - முதல்வரின் பாராட்டைப் பெற்ற வீரப்பனுடைய தீவிரதமிழ்வாதம் - கன்னட வெறியர்களுக்கு நல்ல சாக்கைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

ராஜ்குமார் காப்பாற்றப்பட்ட பிறகும் கூட, ஒரு சிறு பொறி போதும் - தீப்பற்றிக் கொள்ள. அப்படி நடந்தால்அதற்கும் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் கணக்கிட்டால் ஏமாந்துதான்போவார்.

இதையும் விட விபரீதம் - முதல்வரின் பாராட்டை இதுவரை பெறாத தமிழ்த் தீவிரவாதிகள் ஐவர்விடுதலையாவதுதான். இவர்கள் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்களைத் தாக்கியவர்கள், விடுதலைப் புலி சகவாசம்உடைவர்கள். கர்நாடகத்தில் விடுதலை ஆகிறவர்களில் சிலராவது இவர்களோடு சேர்ந்து கொள்ளலாம்.

அதன்பிறகு தமிழகத்தில் இவர்கள் என்னென்ன அராஜகங்களை திட்டமிடுவார்ளோ?

இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு காட்டி வந்துள்ள நாலரை வருட அக்கறையின்மை, தமிழகத்தை எத்தனைவருடங்களுக்கு வாட்டப் போகிறதோ தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X