தீவிரவாதிகள் பிடியில் வீரப்பன் என்கிறது தேசிய லீக்
கோவை:
வீரப்பனுக்கும் ஆபத்து இருக்கிறது, தீவிரவாதிகளின் பிடியில் தான் வீரப்பன் உள்ளான் என இந்திய தேசிய லீக்தெரிவித்துள்ளது.
கோவையில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலரும் வாணியம்பாடி எம்.எல்.ஏ.வுமான அப்துல் லத்தீப்நிருபர்களிடம் கூறியதாவது:
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன்,பிரச்னைக்குரிய பல தீர்மானங்களை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அரசியல் பிரிவு 370-ஐ நீக்குதல், அனைவருக்கும் பொதுவான விதிமுறைகள் (காமன் சிவில் கோடு),ராமர் கோயில் கட்டுதல் போன்ற தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பங்காரு லட்சுமணன் கூறியுள்ளார்.இந்தக் கருத்துக்கள், பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்துக்கள் தானா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.
பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கையில் ஏதேனும் மாற்றம் உண்டா? மதச்சார்பற்ற அரசாக பா.ஜ அரசுசெயல்படுகிறதா என்பது குறித்து விளக்கம் தர வேண்டும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள 11 வது நிதிக் கமிஷன் பரிந்துரைகள், ஏற்கனவே அமைந்த நிதிக் கமிஷன்களின்செயல்பாடுகளிலிருந்து முரண்பாடு மிக்கதாக உள்ளது.
நிதி ஒதுக்கீட்டு முறைகளில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. எனவே இது மாநிலங்களின் நிதிஆரோக்கியத்திற்கும், மத்திய அரசின் நிலைப்புத் தன்மைக்கும் பாதிப்பாக அமையும்.
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் மூன்றாவது அணி அமையாது. அந்த சூழ்நிலை ஏற்பட்டால் தேசிய லீக் எந்தஅணியில் இடம் பெறுவது என்பது பற்றி அப்போது முடிவு செய்யும்.
சந்தன வீரப்பன் கடத்தல் பிரச்னையைப் பொறுத்தவரை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துவிவாதிப்பதிற்கும் விமர்சிப்பதற்கும் இது சரியான நேரம் அல்ல. இந்த சிக்கல் தீரும் வரை விமர்சிக்கவிரும்பவில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது. சட்டத்திற்குபுறம்பான காரியத்தை, சட்டத்திற்கு புறம்பான வழியில்தான் தீர்க்க முடியும். அவ்வாறு தீர்க்க முடியாத பட்சத்தில்விளைவுகள் மோசமானதாக அமையும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு.
காட்டில் உள்ள வீரப்பனுக்கும் ஆபத்து உண்டு. தீவிரவாதிகளின் பிடியில் வீரப்பன் சிக்கியுள்ளான். இம்முறைவீரப்பன் விடுத்துள்ள நிபந்தனைகள் யாருடையது, உருவாக்கியது யார் என்பது குறித்த விசாரணை நடத்தவேண்டும். வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை பெற்றுத் திரும்ப ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.