ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள்
கே: வீரப்பன் கடத்தல் விவகாரத்தின் பின்னனியில் தமிழக அரசு உள்ளது - என்றஅதிர்ச்சிகரமான தகவலை பால் தாக்கரே தந்துள்ளாரே?
ப: நான் இதை நம்பவில்லை. இது அதீதமான கற்பனை என்றே நினைக்கிறேன்.
கே: கேசட்டுக்கு மேல் கேசட் வீரப்பன் அனுப்புவது, அதை முதல்வர் கேட்டு விளக்கமளிப்பது... கேலிக் கூத்தாக இல்லை?
ப: நான் அனுப்பும் கேசட்டுகளை பல காப்பிகள் எடுத்து, விற்பனை செய்து அந்தப் பணத்தை எனக்கு அனுப்புங்கள் - என்று வீரப்பன் சொன்னால்அதையும் இவர்கள் செய்வார்கள். எல்லாம் தமிழ்ப் பற்றுதானே!
கே: காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகள் நடப்பதற்கு, அம்மாநில நிர்வாகம் சரியில்லை என்று கூறலாமா?
ப: தயவு, தாட்சண்யம் இல்லாமல் நசுக்க வேண்டியதை, நாசுக்காக நடத்தி வந்ததுதான் அடிப்படைக் கோளாறு.
கே: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் இல்லாத பட்சத்தில், உங்களிடம் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கலாம்?
ப: ஆன்மிகம், ஆட்டம் பாம்ப், ஆட்சிமுறை, அமெரிக்க அரசியல், ஆஃப்ரிக்க சமுதாய நிலை. அணுமின் உற்பத்தி - என்று எதையாவது கேளுங்களேன்.
நான் என்ன, எனக்குத் தெரியாது என்றா ஒப்புக் கொள்ளப் போகிறேன்? மரபணுவோ, மரபனுவோ - ஏதோ சொல்கிறார்களே - அது பற்றிவேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.
கே: என்னிடம் அதிகாரம் இருந்தால் இரண்டு நாட்களில் வீரப்பனைப் பிடிப்பேன்என்று சுப்ரமண்யம் சுவாமி கூறியிருப்பது பற்றி...?
ப: வீரப்பன் என்ன இட்லி கடையா நடத்துகிறான்?
கே: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்று நினைக்கிறீர்கள்?
ப: புஷ் ஜெயிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
கே: ஜெயலலிதா ஆட்சியில் கட்டிய பாலங்கள் 53 தான். தி.மு.க. ஆட்சியில் 475 பாலங்கள் கட்டியுள்ளோம் என்று கருணாநிதி பெருமையாகக் கூறியிருப்பதுபற்றி...?
ப: இது சரியான புள்ளி விவரமாகத்தான் இருக்கும். கருணாநிதி மூச்சு விட்டாலே, இந்த மூச்சு திட்டமிட்ட சதி வேலை என்று அறிக்கை விடுகிறஜெயலலிதா, இந்த புள்ளி விவரத்துக்கு பதிலே சொல்லவில்லையே!
கே: 1962 -ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்த போது, அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மம்தா பானர்ஜிகூறியிருக்கிறாரே?
ப: உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.
கே: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள், பணக்காரர்களின் சிரிப்பில் எதைக் காண்பார்கள்?
ப;: மோட்சத்தைக் காண்பார்கள்.
கே: நீங்களும் வீரப்பனை, வீரப்பர் என்று மரியாதையாக அழைக்கிறீர்களே? ஏன் இந்த திடீர் மரியாதை?
ப: வீரப்பருக்கு மரியாதை தராவிட்டால் நான் தமிழ் உணர்வு அற்றவன் என்று அரசு கூறிவிடப் போகிதே என்ற பயம்தான் காரணம்.
கே: நம் நாட்டில் அரசியல் பணி செய்வோரின் எண்ணிக்கை ஒரு கோடி தேறுமா?
ப: ஒன்று, இரண்டு தேறலாம் - அவ்வளவுதான். அரசியலில், தங்கள் பணிகளைச் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் நீங்கள்சொல்கிற அளவில் இருக்கலாம்.
கே: தமிழ்நாட்டில் தமிழ் சாகவில்லை என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளது பற்றி...?
ப: தமிளை தாய் மொளியாகக் கொண்ட தமிளகர்கள், தமிளளைக் காப்பபாற்ற முன் வந்து,தமிளைக் கொளை செய்பவர்களைக் கண்டித்து தமிளுக்கு தொண்டு ஸெய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் - என்று டி.வி.யில் யாராவது பேசியதைப் பார்ர்திருப்பார். தமிழ் சாகவில்லை- என்ற நம்பிக்கைவந்திருக்கும்.
கே: சென்னையில் நடந்த பத்திரிக்கை தர்மம் பற்றிய கூட்டமொன்றில், ஆனந்த விகடன், கல்கி, துக்ளக், தினமலர், ஹிந்து ஆகிய பத்திரிக்கைகளுக்கு,பூணூ
ப: துக்ளக் உட்பட, அவர்களால் குறிப்பிடப்பட்ட பத்திரிக்கைகள், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எவ்வளவு பெரிய பாராட்டை அறிவித்திருக்கிறார்கள்! துக்ளக் மற்றும் ஆனந்த விகடன், கல்கி, தினமலர், ஹிந்து ஆகிய பத்திரிக்கைகளுக்கு பூணூ
பூணூ
நினைக்க வேண்டியதில் ஞாபகம், நினைக்கத் தகாததில் மறதி - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;
இகழத் தக்கதில் இகழ்ச்சி, போற்றத் தக்கதில் இகழச்சியின்மை -ஆகிய இரண்டும் இனி என் விரதம்;
நல்லவற்றில் கவனம், தீயவற்றில் அலட்சியம் - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;
அறியத் தக்கதை அறிவது, அறியத் தகாததை அறியாமலிருப்பது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;
நல்லவற்றைக் கேட்டல், தீயவற்றைக் கேட்காமலே இருப்பது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்;
பொய் பேசாமை, உண்மை பேசுவது - ஆகிய இரண்டும் இனி என் விரதம்.
இப்படிப்பட்ட தர்மம்தான் துக்ளக் போன்ற பத்திரிக்கைகளின் தர்மம் - என்று கூறியவர்களுக்கு, நான் சொல்வது இதுதான்: முயற்சிக்கிறேன்.பூணூ
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications