வந்தார் பிரபு தேவா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நடிகர் பிரபு தேவா சந்தித்து ஆறுதல் கூறினார்.

ராஜ்குமார் உள்பட 4 பேரை கடந்த ஜூலை 30-ம் தேதி வீரப்பன் கடத்திச் சென்றார். ராஜ்குமாரையும் மற்றவர்களையும் மீட்பதற்கான முயற்சியில்தமிழக, கர்நாடக அரசுகள் ஈடுபட்டுள்ளன.

ராஜ்குமாரை மீட்பதற்காக நக்கீரன் கோபால் அரசுத் தூதராக வீரப்பனை இரு முறை சந்தித்தார். திங்கள்கிழமை இரவு அவர் மீண்டும் காட்டுக்குள்சென்று வீரப்பனைச் சந்திக்க உள்ளார்.

கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரும் மற்றவர்களும் விரைவில் விடுதலை ஆகவேண்டும் என்று ராஜ்குமாரின் குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும்எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர் பிரபுதேவா, ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று ராஜ்குமாரின் மனைவி மற்றும்உறவினர்களைச் சந்தித்தார்.

சுதர்ஸன ஹோமம்:

இதற்கிடையே, பெங்களூரில் உள்ள ராஜ்குமாரின் வீட்டில் திங்கள்கிழமை சுதர்ஸன ஹோமம் நடத்தப்பட்டது. இதில் ராஜ்குமார் மனைவி பார்வதம்மா,மகன் புனீத் குமார் மற்றும் உறவினர்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகு கர்நாடக மாநிலம் முழுவதிலும் இருந்து அவரது ரசிகர்கள் பெங்களூர் வந்து ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அவரதுகுடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+