தொலைத்தொடர்புத் துறையில் தமிழகம் நல்ல வளர்ச்சி
பழனி:
தமிழகம் தொலைத்தொடர்புத் துறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புஅமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பழனி வந்திருந்தார். பழனியில் உள்ளபாலாறு, பெருந்தாலாறு இல்லத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. மேலும் அக்டோபர் 1 ம் தேதி முதல் தொலைத்தொடர்புத்துறை கார்ப்பரேஷனாக மாற்றப்படுவது உறுதி.
இதனால் ஊழியர்கள் பணி பாதுகாப்பு பற்றி அச்சப்படத் தேவையில்லை. அவர்களது பணி உறுதி செய்யப்படும்.மேலும் அவர்களது இதர கோரிக்கைகளும், பென்ஷன் வழங்கும் முடிவு பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது.தமிழகம் தொலைத் தொடர்புத்துறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதனால்தான் முதலில் சென்னையில்தொலைத்தொடர்பு மூலம் செல்லுலர் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் மதுரையில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழகத்தில் மூன்று நகரங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர் படிப்படியாகதமிழகம் முழுவதும் செல்லுலர் போன் தொலைத்தொடர்பு மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றார் ராம்விலாஸ்பாஸ்வான்.












Click it and Unblock the Notifications