For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை வழக்கில் வாண்டையார் சதோதரர்களுக்கு ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

1998-ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் பழனிவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் குமார்வாண்டையாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

50 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும் மற்றும் அதே தொகைக்கு 2 நபர்கள் ஜாமீனும் பிரேம் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

ஜாமீனில் விடுதலை ஆனாலும், அவர் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்தான் இருக்கவேண்டும், வெளியே செல்லக்கூடாது என்று நீதிபதி டி. முருகேசன்உத்தரவிட்டார்.

இதே வழக்கில் கைதான பிரேம் குமார் வாண்டையாரின் சகோதரர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.

தொழில் போட்டி காரணமாக 1998-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி மதிமுக பிரமுகர் பழனிவேல் கொலை செய்யப்பட்டார். சிதம்பரம் நகரில்பட்டப்பகலில் நடந்த இக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இக் கொலை தொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரமையில் வாண்டையார் சகோதர்களுக்கும்,இக் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த வாண்டையார் சகோதரர்கள் இருவரும் 1999-ம் ஆண்டு ஜனவரிமாதம் கோபிசெட்டிப்பாளையம் மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X