கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் காஷ்மீர் கைதிகள்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள சிறைகளின் நிலையை மேம்படுத்தும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் பயிற்சியைப் போல் பிறதொழிற்பயிற்சியும் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இத் தகவலை மாநில உள்துறைத் துணை அமைச்சர் முஷ்டாக் அகமது லோன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சிறைகளைச் சீரமைக்கும் திட்டம், கைதிகளின் மறுவாழ்த்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்முவில் உள்ள மத்திய சிறையில் இப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கைதிகளில் முதல் பிரிவினர் ஏற்கெனவே கம்ப்யூட்டர் பயிற்சியை முடித்துவிட்டனர்.இரண்டாவது பிரிவினருக்கு இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்பயிற்சியின் கீழ் மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப் பயிற்சிகள் ஜம்முவில் உள்ள மத்திய சிறை மற்றும் கோட் பால்வால் சிறைகளில் அளிக்கப்படுகின்றன.
விரைவில் ஸ்ரீநகர் மத்திய சிறை, ஹிராநகர், கதுவா, உத்தம்பூர் சிறைகளிலும் இப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
கம்ப்யூட்டர் மற்றும் தொழிற்பயிற்சிகளில் சேர கைதிகளிடையே நிறைய ஆர்வம் உள்ளது. சிறைக் கைதிகளின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்துமுயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
பல சிறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரமுல்லா சிறை சீரமைக்கப்பட்டு அங்கு குடிநீர்வசதியும் கழிவு நீர் வெளியேற்றும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளில் கைதிகளுக்குத் தக்க மருத்துவ உதவி கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்லோன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications