துவங்கியது நாகூர் கந்தூரி விழா
நாகூர்:
பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா தொடங்கியது.
நாகையில் இருந்து புதன்கிழமை ஊர்வலமாக நாகூருக்கு எடுத்து வரப்பட்ட கொடி தர்காவில் ஏற்றப்பட்டது. 8-ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம்நடக்கிறது.
முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற புனித தலங்களில் ஒன்றான நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த விழா.
கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண தர்காவின் முன்புறம் மற்றும் தர்காவைச் சுற்றியும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமியிருந்தனர். கொடியேற்றநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவ்தாஸ்மீனா கலந்துகொண்டார்.
நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகின்ற 8-ம் தேதி,நாகை நீலயதாட்சியம்மன் கோவில் அருகே இருந்து புறப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள்திரளுவார்கள். 12-ம் தேதி இரவு 8 மணிக்கு கொடி இறக்கப்பட்டு அன்றுடன் விழா முடிவடையும்.












Click it and Unblock the Notifications