நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2026 வரை உயராது
டெல்லி:
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை2026-ம் ஆண்டு வரை மாற்றப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு மத்திய சட்டஅமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகைக்கு ஏற்பட நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத்தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை 2026-ம் ஆண்டு வரைநிறுத்திவைப்பது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போதுஅறிகப்படுத்தப்படும். அதே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலசட்டப்பேரவைகளுக்கு எஸ்.சி., எஸ்.டி.க்களுககான தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும்.
1991-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும். ஆனால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை மாறாது.
தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. அதே நேரத்தில் ஒவ்வொருதொகுதியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை சமமாக இருக்கும் வகையில்தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்படும் என்றார் ஜேட்லி.