For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2026 வரை உயராது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை2026-ம் ஆண்டு வரை மாற்றப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு மத்திய சட்டஅமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் தொகைக்கு ஏற்பட நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத்தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை 2026-ம் ஆண்டு வரைநிறுத்திவைப்பது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போதுஅறிகப்படுத்தப்படும். அதே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலசட்டப்பேரவைகளுக்கு எஸ்.சி., எஸ்.டி.க்களுககான தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும்.

1991-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கைஉயர்த்தப்படும். ஆனால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை மாறாது.

தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. அதே நேரத்தில் ஒவ்வொருதொகுதியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை சமமாக இருக்கும் வகையில்தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்படும் என்றார் ஜேட்லி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X