கிணற்றில் விஷவாயு தாக்கி 3 பேர் சாவு
ஈரோடு:
கிணற்றில் விஷ வாயு தாக்கி 3 பேர் இறந்தனர். ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில்இச் சம்பவம் நடந்தது.
அக்ரஹாரத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது.இதில் வெங்கடாசலம் (14) என்ற சிறுவன் தவறி விழுந்தான்.
அவனைக் காப்பாற்ற பவானியைச் சேர்ந்த ரவி (28), குரு (16), மதுரையைச் சேர்ந்தமுத்துராமன் (34) ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர்.
வெங்கடாசலத்தை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வரும்போது திடீரென்றுகிணற்றில் இருந்து விஷவாயு வெளியானது. இதில் ரவி, குரு, முத்துராமன் மூவரும்மயக்கமடைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது.சம்பவ இடத்துக்குவந்த தீயணைப்புத் துறையினர் மயக்கத்தில் இருந்த 3 பேரையும்வெங்கடாசலத்தையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வெங்காடலம் தவிர மற்ற மூன்று பேரும் இறந்தனர். வெங்கடாசலத்துக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவுவிசாரித்து வருகின்றனர்.