"ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி"
திருச்சி:
ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று தமிழ்தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் தேசம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் அக்டோபர் 14-ம் தேதிநடைபெற உள்ளது.
முதல் மாநாடு நடைபெறும்போது கட்சியில் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாகஇருப்பார்கள். அதற்கேற்ப வகையில் எங்களது கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பிகார் முதல் ராப்ரி தேவி, அவரது கணவர் லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்பட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இம் மாதம் 17-ம் தேதி மதுரையில் தென் மண்டல மாணவர் மாநாடு நடத்த உள்ளோம்.18-ம் தேதி திண்டிவனத்திலும், 29-ம் தேதி கடலூரிலும் மாவட்ட மாநாடுகள்நடத்தப்படும்.
இப்போது உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த கூட்டணியிலும் ஒற்றுமைஇல்லை. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றுஇப்போதைக்கு சொல்லமுடியாது.
முதல் மாநில மாநாடு நடத்தி எங்கள் பலத்தை நிரூபித்த பிறகு அரசியல் சூழ்நிலைக்குஏற்ப கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதே நேரத்தில் ஆட்சியில் பங்குகொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால்தான் எல்லா சமுதாயத்தினருக்கு சுமுக முடிவுகாண முடியும் என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications