For Daily Alerts
Just In
செப். 9-ல் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டம்
சென்னை:
நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டு ஏமாந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தைபொருளாதார குற்ற பிரிவு போலீஸார் வரும் 9-ம் தேதி கூட்டியுள்ளனர்.
குற்றப்பிரிவு ஐஜி பாலசுப்ரமணியன் தலைமையில் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இக் கூட்டம் நடைபெறும்.
இக் கூட்டத்தில் முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள்கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
நிதி நிறுவன மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நபர்கள், அவர்கள்சொத்துக்கள் ஆகிய விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு தெரிந்திருந்தால் அந்தவிபரங்களை அக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Story first published: Friday, September 1, 2000, 5:30 [IST]