"உச்சநீதிமன்றத் தடையால் வீரப்பன்-கோபால் பேச்சு பாதிக்கப்படாது"
பெங்களூர்:
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் - நக்கீரன்கோபால் இடையேயான பேச்சுவார்த்தை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றுகர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று33 நாட்கள் ஆகிவிட்டன.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனுடன் நக்கீரன் கோபால் பேச்சு நடத்திவருகிறார்.
ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்க சில கோரிக்கைகளை வீரப்பன்தெரிவித்திருந்தான். கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளையும்விடுவிக்கவேண்டும் என்பதும் வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்று.
அந்த கோரிக்கையை ஏற்று தடா கைதிகள் 51 பேரையும விடுவிக்க கர்நாடக அரசுஉத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால், 51 தடா கைதிகளும் விடுதலை ஆக முடியாமல் உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இத் தடையால் 3-வது முறையாக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன்நக்கீரன் கோபால் நடத்தி வரும் பேச்சுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நீதிமன்ற விவகாரத்தை கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் கவனித்துக் கொள்ளும்.உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரத்தையும் கர்நாடக அரசு எதிர்பார்த்துள்ளது. முழுவிவரங்கள் கிடைத்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் தடையால் ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகிறதுஎன்றாலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடக அரசு கீழ்படிகிறது என்றார் சந்திரேகவுடா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications