For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்றோரைச் சந்தித்தார் தமிழ்த் தீவிரவாதி மணிகண்டன்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுதலை செய்யக் கோரும், தமிழ்த் தீவிரவாதிகளில்ஒருவரான மணிகண்டனை அவரது பெற்றோர்கள் சந்தித்துப் பேசினர்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை அவரது தந்தைஅண்ணாமலையும், தாய் சாந்தாவும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று மணிகண்டனை வீரப்பனிடம் ஒப்படைக்ககூடாதுஎன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார்.

இம் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வீரப்பனுடன் சேர மணிகண்டனக்குவிருப்பமா என்று விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

அதன்படி திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட், சிறைக்குச் சென்று மணிகண்டனைச்சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், தான் வீரப்பனுடன் சேர விரும்புவதாகவும், தான் மட்டுமல்லநாங்கள் 5 தீவரவாதிகளும் வீரப்பனுடன் சேர விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மணிகண்டனை அவரது பெற்றோர்கள் சந்தித்துப் பேசியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X