"ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் ஜெ. உடன் கூட்டணி இல்லை"
மதுரை:
ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கை முடிவுடன்தான் மூப்பனாருடன் அணி சேர்ந்தோம். இப்போது அ.தி.மு.க. தனியாகஆட்சியமைப்பதே திட்டம் என்று கூறுகிறது.
அ.தி.மு.க. முடிவை ஏற்று மூப்பனார் சமரசமாக சென்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி என்ற எங்கள்முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மூன்றாவது அணி உருவாக வேண்டும் அதன்மூலம் தி.மு.க. எதிர்ப்பு ஓட்டு சிதறவேண்டும் என்று கலைஞர் நினைக்கிறார்.
அதற்கு ஜெயலலிதாவும், மூப்பனாரும் வழிவகுக்க மாட்டார்கள் என்பது என்நம்பிக்கை. தமிழகத்தில் கூட்டணி அரசுதான் அமைய வேண்டும்.
கூட்டணிஆட்சி என்கிறபோது பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இடம் பெறும்அணியில் சேரமாட்டோம். ஏனென்றால் இந்த கட்சிகள் ஜாதி- மதவாத கட்சிகள்என்றார் திருமாவளவன்.