அதிமுக - தமாகா கூட்டணியில் குழப்பம் என்கிறார் வைகோ
குற்றாலம்:
அதிமுக-தமாகா கூட்டணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பெரிய, பலமான இயக்கமாக மதிமுக வளர்ந்து வருகிறது. நவம்பர் 14-ம்தேதி கட்சியின் அமைப்புத் தேர்தல் பணிகள் தொடங்குகின்றன.
பொதுமக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாகச்செயல்படுத்தி வருகிறது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். ஜெயலலிதாவின்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடையும்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகதமிழகம் திகழ்கிறது.
தற்போது அதிமுக-தமாகா கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு கட்சித்தரப்புகளில் இருந்தும் முரண்பாடான, குழப்பமான கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் தமிழக அரசும் கர்நாடக அரசும்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இப் பிரச்சினையில் விரைவில் நல்ல தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications