கோவையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை
கோவை:
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா 3 நாள் நடைபெற உள்ளது. இந்து முன்னணிஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் முடிவில் பெரிய ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பம்சமாக ஆசியாவிலேயே மிகப்பெரியதாக 101 அடி உயரமுள்ள விநாயகர் சிலை, கோவை புலியகுளம் பகுதியில்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஊர்வலத்தின்போதுஇந்த பெரிய சிலை முதலில் எடுத்துச் செல்லும். மற்ற சிலைகள் எல்லாம் பின்னால்அணிவகுத்து எடுத்துச் செல்லப்படும்.
கோவை நகரம் முழுவதும் பல விழாக்களுக்கு இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.3-ம் நாள் முடிவில் அனைத்து சிலைகளும் கோவை தெப்பக்குளம் மைதானத்திலிருந்துஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முத்தன்னன் குளத்தில் கரைக்கப்படும்.
கோவை புறநகர்பகுதியில் வைத்து பூஜிக்கப்படும் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சூலூர் பெரிய குளத்தில் கரைக்கப்படும்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications