பெண் இன்ஸ்பெக்டரை அடித்தவர்களுக்கு வலைவீச்சு
ஈரோடு:
வழக்கை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேவகி ராணி. இவர்சில பெண் போலீசாருடன் சிவகிரி அருகே உள்ள சின்ன தண்டாம்பாளையம் என்ற ஊருக்குச் சென்றார்.
அங்கு ஒரு வழக்குத் தொடர்பாக சுப்ரமணியம் என்பவரை விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குவெளியே நின்று கொண்டு, சுப்ரமணியத்தை வெளியே அழைத்துள்ளார்.
அப்போது சுப்ரமணியம் வெளியே வந்து, தேவகிராணியை திட்டி, அடித்துள்ளார். அப்போது சுப்ரமணியத்திற்குஆதரவாக அவரது உறவினர் முத்தப்பன் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து கொண்டு சப் இன்ஸ்பெக்டரைஅடித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் தாராபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications