வாஜ்பாய், முஷாரப் சந்திப்புக்கு காஷ்மீரிகள் ஆர்வம்
ஸ்ரீநகர்:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்குச் செல்லும்போது, அங்கு பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் முஷாரப்பைச் சந்தித்துப் பேசுவார் என்று காஷ்மீர் மக்கள் எதிர்பார்ப்புதெரிவித்துள்ளனர்.
இருவரும் சந்தித்தால் அது காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒருவகையில் உதவியாக இருக்கும் என்று காஷ்மீரிகள் நினைக்கின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக ரத்தச் சகதியில் நசநசத்திருக்கும் காஷ்மீரை சுத்தம் செய்யஉடனடியாக அமைதித் தீர்வு காண வேண்டியது அவசியம் என காஷ்மீரிகள்விரும்புகின்றனர். அதற்கு இந்திய, பாகிஸ்தானிய தலைவர்கள் பேச்சு நடத்தவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஷ்மீரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ரஷீத் என்பவர் கூறுகையில், காஷ்மீரில்மேலும், மேலும் பல கல்லறைகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை என்பதைபிரதமர் வாஜ்பாயும், முஷாரப்பும் உணர்வார்கள் என்று நம்புகிறோம். வன்முறைபோதும். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமரும், முஷாரப்பும் சந்தித்துப் பேசவேண்டியது அவசியம் என்றார் அவர்.
ரஷீத்தின் கருத்துத்தான் பள்ளத்தாக்கு முழுவதிலும் ஒவ்வொருவரின் மனதிலும்எதிரொலிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications