நீச்சல் அணியை எதிர்த்து இலங்கை ராணுவ அதிகாரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீச்சல் அணியில் தனது மகள்சேர்க்கப்படாததால், இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ராணுவத்தில் அதிகாரியாக உள்ள ரோஹன் தலுவத்தேயின் மகள் ரதீஷா. சிட்னிசெல்லும் இலங்கை நீச்சல் அணியில், 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ரதீஷாவுக்குப்பதில், தீக்ஷனா ரத்னசேகரா என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

தகுதிப் போட்டியில் சரியாக செய்தும், சரியான குறிப்பிடத்தக்க நேரத்தில் தூரத்தைக்கடந்தும் கூட தனது மகள் அணியில் சேர்க்கப்படாதது ரோஹனுக்கு கோபத்தைஏற்படுத்தியது.

இதுகுறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்திடம் அவர் புகார் கூறினார். அதற்கு,50 மீட்டர் போட்டியில் ரதீஷாவை, தீக்ஷனா தோற்கடித்துள்ளார். எனவேதான்அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று பதில் வந்தது.

இதனால் சமாதானம் அடையாத ரோஹன், தற்போது இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+