பதுக்கி வைத்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுவெடித்ததில், அந்த வீடு இடிந்து தரை மட்டமாகியது. பக்கத்தில் இருந்த இரண்டுவீடுகளும் சேதமடைந்தன.
மீனாட்சி நகர் என்ற பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடந்தது. இதில்யாரும் காயம் அடையவில்லை.
சியாம் சுந்தர் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள்பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தீப்பற்றி வெடித்ததில் இந்த விபத்து நடந்ததுஎன்று போலீஸார் தெரிவித்தனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். சியாம்சுந்தரை போலீஸார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications