விசாரணையைத் துவக்குகிறது சதாசிவம் கமிஷன்
சென்னை:
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கூட்டு அதிரடிப்படை வீரர்கள் செய்தகொடுமைகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டசதாசிவம் கமிஷனின் விசாரணைசெப்டம்பர் 11-ம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கழக ஆட்சியின் போது வீரப்பனைப் பிடிக்க தமிழக - கர்நாடக அரசுகள்சார்பில் கூட்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.
வீரப்பன் மறைந்துள்ள காட்டுப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வீர்பபனுக்குஉதவுவதாக கருதப்பட்டது. இதற்காக அதிரடிப்படை வீரர்கள் கிராம மக்களைசித்ரவதை செய்ததாகவும், பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மனித உரிமைகள்மீறப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி மனித உரிமை கமிஷனுக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதை விசாரிக்க,நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷனை மனித உரிமை கமிஷன் நியமித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்ககல்செய்யப்பட்டது. சதாசிவம் கமிஷனுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
அந்த தடை உத்தரவை நீக்கி, விசாரணைக் கமிஷன் உடனே அறிக்கை வெளியிடவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்,கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்ச ரூபாயும், கொல்லப்பட்டவர்கள்குடும்பத்திற்கு 10லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் உடனேவழங்க வேண்டும் என்று வீரப்பன் கோரிக்கை விதித்திருந்தான்.
முதல் கட்டமாக இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாய் நிவாரணத்திற்குஒதுக்கியது. இந்த நிலையில், மறுபடியும் சதாசிவம் கமிஷன் உயிர் பெற்றுள்ளது.வருகின்ற 11-ம் தேதி நான்காவது முறையாக சேலம் மாவட்டத்தில் இருந்து சதாசிவம்கமிஷன் விசாரணையைத் தொடங்குகிறது












Click it and Unblock the Notifications