தேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதிநாராயணன் இந்த மாதம் 5-ம் தேதி வழங்குகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 5-ம் தேதிஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறந்தஆசிரியர்களுக்கு விருது வழங்கி மத்திய அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.
கல்வியை மேம்படுத்துவதில் ஈடுபாடு, குழந்தைகளின் மீது அக்கறை, அவர்கள்கல்வியில் ஊக்கம், மக்களிடம் நற்பெயர் என சிறப்பாக பணியாற்றியஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மத்திய அரசு 284 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுவழங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் இந்த விருதைப் பெறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications