ஏற்றுமதிப் போட்டியைச் சந்திக்க மொரீஷியஸ் அழைப்பு
திருப்பூர்:
எதிர்காலத்தில் ஏற்படும் ஏற்றுமதி போட்டியைச் சமாளிக்க, இந்திய ஆயத்த ஆடைநிறுவனங்கள் மொரீஷியஸ் நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் எனதிருப்பூருக்கு வருகை தந்துள்ள மொரீஷியஸ் நாட்டு ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலஇணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூரில், மொரீஷியஸ் நாட்டு ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணை இயக்குநர்பீடாசி நிருபர்களிடம் கூறியதாவது:
மொரீஷியஸ் நாட்டில் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பெருகி வருகிறது.இந்த நாட்டில் மலிவான விலையில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும்என்ற நிலை உருவாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சஹாரா சார்பு பகுதிகளிலிருந்து அமெரிக்கா ஆயத்தஆடைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இப்பகுதியிலிருந்து இதற்காக 70நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மொரிஷியஸ் தீவும் தேர்வு பெற்றுள்ளது.
மொரீஷியஸிலிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகள் இறக்குமதிசெய்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஆனால், இந்த நாடுகள் ஒருநிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையின் படி அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காநாடுகளிலிருந்து மொரீஷியஸ் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவேண்டும்.
இந்தியாவால் வேகமாக உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவிடம் தேவையான மனிதசக்திகள் உள்ளன. இதுதான், மொரீஷியஸிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஆயத்தஆடை உற்பத்தியில் உள்ள ஒரே வேறுபாடு.
எனவே, இந்தியா, குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதியைபெருக்கிக் கொள்ள மொரிஷியஸ் தீவில் தொழிற்சாலையை அமைக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சர்வதேச போட்டியில் எளிதாக வெற்றி பெறமுடியும்.இல்லையென்றால், ஏற்றுமதியில் பின்தங்கிய நிலை ஏற்படும்.
அமெரிக்காவிற்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய உறுதியான நிலையைகொண்டிருந்தாலும், இதற்கு கடும் போட்டியாக மொரீஷியஸ் தீவு விளங்கும் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications