ராஜ்குமாரை மீட்க நாடார் பேரவை தயார்!
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்டு வர காட்டுக்குச் செல்லத் தயார் என்று தமிழக நாடார்இளைஞர் பேரவைத் தலைவர் அறிவானந்த பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வீரப்பன் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ்குமாரும், பிறரும் பத்திரமாகதிரும்பி வர வேண்டும் என்பதற்காக ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில்நாடார் இளைஞர் பேரவை சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பேரவைத் தலைவர் அறிவானந்த பாண்டியன், நாடார் மகாஜன சங்கத் துணைத்தலைவர் வெற்றிவேல் தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பிறகு கோவில்பிரசாதத்தை, தாளவாடி தாலுகா, தொட்டகாஜனூரில் உள்ள ராஜ்குமார் வீட்டுக்குஇவர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு ராஜ்குமார் உறவினர்களிடம் பிரசாதம் கொடுத்துஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அறிவானந்த பாண்டியன் பேசுகையில், நடிகர் ராஜ்குமார்பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நாடார் மகாஜனசங்கத்தில் ஆயுள் கால உறுப்பினராக ராஜ்குமார் இருக்கிறார்.
அவரை காட்டுக்குச் சென்று மீட்டு வர நாடார் மகாஜன சங்கம் தயாராக உள்ளதுஎன்றார் அவர்.