For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ். சண்டையில் 26 இலங்கை வீரர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் 26 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இலங்கை ராணுவத்திடமிருந்து யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில்மறைவிடங்களை ஏற்படுத்திக் கொண்டு இலங்கை ராணுவத்தினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந் நிலையில், புலிகளை தங்களது மறைவிடங்களில் விரட்டுவதற்காக இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.இதையடுத்து இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

புதிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 26 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் சரத் குமாரரத்னே தெரிவித்தார்.

ஆனால், புதிய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான சண்டை காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும்அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தாக்குதலின் ஒரு பகுதியாக நாடான்கோவில் மற்றும் பாலவி ஆகிய இடங்களில் புலிகளின் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 புலிகள்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து எந்தவிதமான தாக்குதலையும் நடத்துவதிலிருந்துவிடுதலைப் புலிகளைத் தடுக்கும் வகையில் இப் புதிய தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வட பகுதியில் புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து கடுமையானத் தாக்குதலை நடத்தி வருவதாகவும், பதிலுக்கும்புலிகளும் தாக்குதல் நடத்துவதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X