For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 கிலோ தங்கத்துடன் தலைமறைவானவருக்கு வலைவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில், நகை செய்வதற்காக நான்கு கிலோ தங்கத்தை வாங்கிச் சென்றவர் தலைமறைவானார்.

கோவை இடையர் வீதியில் நகைக் கடை வைத்திருப்பவர் சீனிவாசன். இவரிடம் டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நகை செய்வதற்காக தங்கக்கட்டிகளைப் பெற்றுச் செல்வார்.

நகைகள்ை செய்த பின்னர் அதனை சீனிவாசனிடம் கொண்டு வந்து கொடுப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல நகை செய்ய கார்த்திகேயன் நான்குகிலோ தங்கத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். ஆனால் நகையுடன் வரவில்லை.

அதிர்ச்சியடைந்த சீனிவாசன், போலீசில் புகார் தெரிவித்தார். மாநகரக் குற்றப் புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனைத் தேடிவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X