6-ம் தேதி முதல் டெலிபோன் ஸ்டிரைக்
சென்னை:
வரும் 6ம்தேதி முதல் தொலைபேசி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஊழியர்களின் போராட்டக்குழுத் தலைவர் சுப்புராமன், அமைப்புச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று சென்னையில்நிருபர்களை சந்தித்தனர்.
தொலைபேசித் துறையை நிறுவனமாக (கார்போரேட்) மாற்றுவது என்று அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதிமுதல்பாரத் சஞ்சார் நிகாம் என்ற பெயரில் இந்தத் துறை நிறுவனமாக இயங்க உள்ளது.
தொலைத் தொடர்பில் உள்ள எஸ்.டி.டி மற்றும் ஐ.எஸ்.டி தனியாருக்கு விடப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு பதினைந்தாயிரம்கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.
தொலைத் தொடர்பின் நிதி நிலை ஆதாரங்களை பற்றி அரசு வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தோம். ஊழியர்களின்ஓய்வூதியம் மற்றும் பணி பாதுகாப்பு குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து அரசு எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஆறு அமைச்சர்கள் குழுவும் எந்தபதிலையும் தெரிவிக்கவில்லை.
இதனைக் கண்டித்து, வரும் ஆறாம் தேதி முதல் இந்தியா முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். என்.எப்.டி .இ,எப்.என்.டி.ஓ., பி.டி.இ.எப். ஆகிய சம்மேளனங்களும், பல்வேறு சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications