இலங்கை தேர்தல் களத்தில் 5,430 பேர்
கொழும்பு:
இலங்கையில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் பெரும் அளவிலானவேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சுமார் 5,430 பேர் பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 225 தொகுதிகளில் இந்த 5,430 பேர் போட்டியிடுகின்றனர். 1994-ம் ஆண்டு நடந்த கடந்த பொதுத்தேர்தலில் 1,449 பேர் தான் போட்டியிட்டனர்.
இதற்கிடையே இன மோதலகளுடன் தேர்தல் தொடர்பான அரசியல் மோதல்களும் இலங்கையில்தொடங்கிவிட்டன. கிழக்கு அம்பாரா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்தனர்.
கடும் மோதல் நடந்து வரும் யாழ்பாணத்திலும் கூட அதிக அளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர். வடக்கு வன்னி, திரிகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிலும் அதிக அளவிலானவேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வரும் அக்டோபர் 10ம் தேதி நடக்க உள்ள இந்தத் தேர்தலில் 12.07 மில்லியன் பேர் வாக்களிப்பர்.
29 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைத்தாக்கிய கப்பற்படை வீரர் ரோகன்-டி-சில்வாவும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications