மாற்று வழி குறித்து யோசிப்போம் .. கிருஷ்ணா
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடித்து வைத்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான மாற்று வழிகளையும்ஆராய்வோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த ஜூலை 30-ம் தேதி கடத்திச் சென்றான். கடத்தியவர்களை விடுவிக்க சிலகோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்தான்.
வீரப்பனின் கோரிக்கைகளை கர்நாடக அரசும், தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
ஆனால், வீரப்பனின் முக்கிய கோரிக்கையான கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளின் விடுதலை, உச்ச நீதிமன்ற தடையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகிக் கொண்டே வருகிறது.
இது குறித்து 3-வது முறையாக காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்து விளக்கி வருகிறார் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால்.
இந் நிலையில், பெங்களூரில் நிருபர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தார் எஸ்.எம். கிருஷ்ணா. அப்போது அவர் கூறியதாவது:
ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் கடத்திச் சென்று 36 நாட்கள் ஆகிவிட்டன. வீரப்பன் பிடியில் உள்ளவர்களை பத்திரமாக மீட்பதற்கானஅனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
ராஜ்குமாரை மீட்க ஒரே வழியில் யோசிக்காமல் மாற்று வழிகளிலும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அது எந்த வழி என்பதைஇப்போதைக்குத் தெரிவிக்க முடியாது.
கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வீரப்பனின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றிவிட்டு ராஜ்குமாரை மீட்பதற்குப் பதிலாக ராஜ்குமார் மீட்பு நடவடிக்கையின்போது வீரப்பனையும்பிடிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications