இறந்து போன மனைவியுடன் வாழ்ந்த முதியவர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இறந்து போன மனைவியுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த முதியவரை பொதுமக்கள் மீட்டனர்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (75). இவரது மனைவி ராஜலட்சுமி (68). நாராயணசாமிக்கு மிகவும் வயதாகிவிட்டதால், ராஜலட்சுமியே அவரைக் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ராஜலட்சுமி இறந்துபோனார்.

ராஜலட்சுமி இறந்ததை அறிந்தும், நாராயணசாமி யாருக்கும் தகவல் கொடுக்காமல் வீட்டிற்குள்ளேய நடமாடிக்கொண்டிருந்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு, இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து இறந்து போனராஜலட்சுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனைக்குப் பின்னர் ராஜலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+