வாஜ்பாய் பயணம் முக்கியமானது என்கிறது அமெரிக்கா
டெல்லி:
இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இம் மாதம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள உள்ளபயணம் அனைத்து விதத்திலும் முக்கியமானது என்று அமெரிக்க அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அமெரிக்காவில் வாஜ்பாய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், அமெரிக்கப்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ரத்து செய்யாமல் அமெரிக்காசெல்கிறார் வாஜ்பாய்.
அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தின் கடைக் கட்டத்தில் இருக்கும் பில் கிளின்டனுன்வாஜ்பாய் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். இரு நாடுகளுக்கும்இடையான உறவு, பிரச்சினைகள் மற்றும் உலக நடப்புகள் பற்றி இரு நாடுகளின்தலைவர்களும் பேசுகின்றனர்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுச்சூழல், பரஸ்பர சட்ட உதவி ஆகியவை தொடர்பானமூன்று முக்கிய ஒப்பந்தங்களில் வாஜ்பாயும், கிளின்டனும் கையெழுத்திடுவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத பரிசோதனைத்தடை ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசுவார்கள்என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதச் சோதனை நடத்தியதால் இந்தியா மீதுபொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. பல்வேறு காலகட்டத்தில் பலதடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.
மீதமுள்ள தடைகள், இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்க அரசு நிர்வாகம், அந்தப்பிரச்சினையில் வாஜ்பாயியின் சுற்றுப்பயணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாது.
வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர் அமெரிக்காவுக்கு வந்தால் எந்த அளவுக்குமுக்கியத்துவம் தரப்படுமோ அந்த அளவுக்கு வாஜ்பாய் பயணத்துக்கும்முக்கியத்துவம் தரப்படும்.
இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வாஜ்பாயியின் இந்தசுற்றுப்பயணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications