"முஸ்லீம் கட்சிக்கு சந்திரிகா ஆயுதங்கள் தருகிறார்
கொழும்பு:
தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டால் திருப்பித் தாக்குமாறு கூறி முஸ்லீம் கட்சிஒன்றின் தொண்டர்களுக்கு அதிபர் சந்திரிகா அரசு ஆயுதங்களைத் தருகிறது என்றுஇலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல்முடிந்துள்ள நிலையில், பிரசாரம் துவங்கியுள்ளது. இந்த நிலையில், வன்முறையும்களை கட்டத் துவங்கியுள்ளது.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசிலர், ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை, வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டுத் திரும்புகையில் இரு கட்சித்தொண்டர்களும் மோதிக் கொண்டனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர்ஒருவர் இறந்தார். 29 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் அனுரா பண்டாரநாயகே இச்சம்பவம்குறித்துக் கூறுகையில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அரசேதுப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளது. உடனடியாகஅவர்களடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
பிற கட்சித் தொண்டர்களைத் தாக்க முஸ்லீம் காஙகிரஸ் தொண்டர்களுக்கு அதிபர்சந்தரிகா உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அனுரா. அதிபரின் தம்பிதான் அனுரா என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்க, நெருங்க வன்முறையும் அதிகரித்திருப்பதாக தேர்தலைக்கண்காணித்து வரும் தனியார் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. நாடாளுமன்றம்கலைக்கப்பட்ட ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் இதுவரை 32 தேர்தல் தொடர்பானவன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.
சனிக்கிழமைதான் சுற்றுலாத் துறை அமைச்சர் சேமசிங்கே மீது தாக்குதல் நடந்தது.இதில் அவரது வலது கண் போனது. தாக்கியவர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.