அப்துல் கரீமை சந்திக்கிறார்கள் பிணைக்கைதியின் குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

தார்வாட்:

மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள ஓய்வுபெற்ற கர்நாடக போலீஸ் அதிகாரி அப்துல்கரீமை, ராஜ்குமாருடன் சேர்த்துக்கடத்தப்பட்டுள்ள நாகப்பாவின் குடும்பத்தார் புதன்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர்.

ராஜ்குமார் உள்பட வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் மூன்று பேரையும் விரைவில்விடுவிப்பதற்காக மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகள் உள்பட பல சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 122 பேரை விடுவிக்க கர்நாடக அரசு தீர்மானித்திருந்தது.

ஆனால், தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ. ஷகீல்அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கைதிகளை விடுவிக்க தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, ராஜ்குமாருடன் சேர்த்து கடத்தப்பட்டுள்ள அவரது உறவினர் நாகப்பாவின் தந்தை ருத்ரப்பா,சகோதரர் சிவப்பா ஆகியோர் அப்துல் கரீமை புதன்கிழமை சந்தித்துப் பேச தீர்மானித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது அப்துல் கரீமுடன் கோர்ட் வழக்குத் தொடர்பாக சமாதானம் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அப்துல்கரீமை சந்திப்பதற்கு முன், அவர்கள் பெங்களூரில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவைச் சந்தித்துப்பேசுவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+