தனித் தொகுதி கேட்கிறார்கள் முஸ்லீம்கள்
திருநெல்வேலி:
மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முஸ்லிம் கல்வி மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லிம்கள் உரிய அதிகாரம் பெறுவதற்கான இயக்கத்தின் சார்பில் முஸ்லிம் கல்வி மாநாடு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் முஸ்லிம்ஆதரவற்றோர் நிலைய வளாகத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அகமதி சாகிப் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சாரஇட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது;
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு தனித் தொகுதி முறையை அமல்படுத்த உரிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசைக்கேட்டுக்கொள்வது;
முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக அமல் படுத்தவேண்டும் என்கிற தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில்நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications