For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபாலுக்கு பதில் வேறொரு தூதர் அனுப்பப்படுவாரா?

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகரை மீட்பதற்காகநக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் அரசு தூதராக மூன்று முறை காட்டுக்குச்சென்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஒவ்வொரு முறையும் வீடியோ கேசட்டும், ஆடியோ கேசட்டும் வீரப்பனிடமிருந்துகொண்டு வந்து கொடுத்த வண்ணம் இருந்தார். ஆனால் அவரால் ராஜ்குமாரைவிடுவிக்க முடியவில்லை.

இதன் காரணமாக வேறு ஒருவரை அரசு தூதராக அனுப்பலாமா என தமிழக.கர்நாடகஅரசுகளும் யோசித்து வருவதாக தெரிகிறது. இது குறித்து ஆலோசனை செய்ய தமிழகமுதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

121 தடா கைதிகளின் விடுதலைக்காக தடா சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடி வரும்வழக்கறிஞர் வேணுகோபால் ஏற்கனவே காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியிருக்கிறார். எனவே, அவரை தூதராக அனுப்பவும்வாய்ப்புள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X