தொலைத் தொடர்பு ஊழியர் ஸ்டிரைக் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தொலைத் தொடர்புத் துறையைத் தனி நிறுவனமாக மாற்றுவதைக் கண்டித்து நாடு முழுவதும் புதன்கிழமை 4 லட்சம் தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள்காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.

அரசு செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், 4 லட்சம் தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மின்னணுதொலை பேசி நிலையங்கள் எந்தப் பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயங்கின. இருப்பினும் தொலைபேசிகள் பழுதுபட்டால், சரி செய்வதில் சிக்கல்ஏற்படும் என்றார் அவர்.

தொலைத் தொடர்புத் துறையை, மத்திய தொலைத் தொடர்புத் துறையிலிருந்து பிரித்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக்கவும்,இத்திட்டத்தை அக்டோபர் 1 ம் தேதி முதல் செயல்படுத்தவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம், தேசியத் தொலைத் தொடர்புத் துறை சம்மேளனம், தேசிய தொலைத்தொடர்புத் துறை சங்கம் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

தொலைத் தொடர்புத் துறையைத் தனி நிறுவனமாக மாற்றுவதால் பணிபாதுகாப்பு, மத்திய அரசின் பல்வேறு சலுகைகள், ஓய்வூதியச் சலுகைகள்ஆகியவை பாதிக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சுகின்றனர் என்றார்.

இதற்கிடையே, தேசியத் தொலைத் தொடர்புத் துறை சம்மேளன உறுப்பினர்களுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும்இடையே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதையடுத்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+