விஷ ஸ்வீட் அனுப்பியவரை விசாரிக்க போலீசுக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை போலீசாருக்கு சயனைடு பழங்கள் அடங்கிய பார்சலை அனுப்பிய வழக்கில் கைதான அக்பர் என்பவரிடம் மூன்று நாட்கள் விசாரணை செய்யசிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது.

கோவை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு பழங்கள், பிஸ்கட்டுகள் அடங்கிய மர்மப் பார்சல் வந்தது. இந்த உணவுப் பொருட்களில்சயனைடு விஷம் கலந்திருப்பதை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடித்தார். இதையடுத்து போலீஸ்காரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பார்சல் அனுப்பிய வழக்குத் தொடர்பாக அல் அமீன் காலனியைச் சேர்ந்த அக்பர் (25) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். வழக்கை முதலில்சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது கோவை குண்டு வெடிப்பு புலனாய்வுப் பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்பரிடம் விசாரணை செய்ய அனுமதி தருமாறு கோரி, சிறப்பு புலனாய்வுக் குழு, கோவை 5-வது நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நம்பிராஜன், அக்பரை சிறப்பு புலனாய்வுக் குழு தனது பாதுகாப்பில் வைத்து மூன்று நாட்கள் விசாரணை செய்யஅனுமதியளித்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அக்பர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+