இந்திய, பாக். ராணுவ வீரர்கள் மோதலில் 7 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கிடையே புதன்கிழமை நடந்த ஆர்ட்டிலரிசண்டையில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை இரவு யூரி பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே திடீரென கடும் சண்டை மூண்டது. இந்தச் சண்டையில் ஆர்ட்டில்லரிகள்பயன்படுத்தப்பட்டன. இதில், இந்திய ராணுவ அதிகாரி, 1 ராணுவ வீரர் மேலும் 3 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இதே போல் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட ஆர்ட்டிலரி சண்டையில் ராணுவ ஜூனியர் அதிகாரி ஒருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் கொல்லப்பட்டனர்.இந்தச் சண்டை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றுள்ள இந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பாகிஸ்தான் பதட்டத்தை ஏற்படுத்திவருகிறது என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications