For Daily Alerts
Just In
ரூ. 6 லட்சம் மோசடி வழக்கில் 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு
கோவை:
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் ரூ. 6.5 லட்சம் மோசடி செய்ததாகதொடரப்பட்ட வழக்கில் ஊழியர்களின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம்உத்தரவிட்டது.
கோவை அருகே உள்ள வடசித்தூரில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிஉள்ளது. இந்த வங்கியில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க 6.44 லட்ச ரூபாயைஎடுத்துள்ளனர்.
பொருட்கள் வாங்கிய பின்னர், வங்கிக்குத் திருப்பிச் செலுத்தாமல் காலம்தாழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக ஊழியர்கள் ஆறுமுகம், சுப்ரமணியம், சுப்ரமணியன்உட்பட 5 பேர் தலைமறைவாயினர்.
இவர்கள் 5 பேரும் கோவை மாவட்ட தன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டுவக்கீல் மூலமாக மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிசொக்கலிங்கம் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, September 7, 2000, 5:30 [IST]