ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மார்மட் பகுதியில் தீவிரவாதி ஒருவர் ராணுவ வீரர்களால் புதன்கிழமைசுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பெயர் பரூக் அகமது பட் என்ற பரூக் அன்சாரி. இவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவன்.
உதம்பூர் மாவட்டத்தில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர் பரூக் அன்சாரி. இதுதவிர தோடா மாவட்டத்தில் நடந்த இந்துக்கள்படுகொலைச் சம்பவத்திலும் தொடர்புடையவர் இவர்.
இதுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்மட் பகுதியிலுள்ள கலாமட் காட்டுப் பகுதியில் 12,000 அடி ஆழமுள்ள பதுங்கு குழியில் இவர்பதுங்கியிருந்த போது ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பல குண்டுவெடிப்பு சம்பவங்கள், படுகொலைச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் இவர். இவரைப் பிடிப்பதற்காகராணுவ வீரர்கள் பலமுறை முயன்று தோற்றனர். இம்முறை அவர் தப்ப முடியவில்லை.
அதே பகுதியில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது என்றார் ராணுவ செய்தித் தொடர்பாளர்.
ஐ.ஏ.என்.எஸ்.