90 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு "போனஸ் 20 ஆண்டு
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி பகுதியில் மூகமூடிக் கொள்ளையில் ஈடுபட்டு 90 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவருக்கு மற்றொரு வழக்கில், மேலும் 20 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வஞ்சரம், சங்கராபுரம் ஆகிய இரண்டு இடங்களில்மூன்று வருடங்களுக்கு முன்பாக நடந்த முகமூடி கொள்ளை சம்பவத்தில்தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுவத்தூர் கணேசனுக்கு 310 ஆண்டுகளும், பெரியசெல்வத்திற்கு (28) 210 ஆண்டுகளும், சின்ன செல்வத்திற்கு 270 ஆண்டுகளும்,கோவிந்தனுக்கு 90 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்புவழங்கபட்டிருந்தது.
இதே வழக்கில் பிச்சமுத்து என்பவருக்கு 90 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனைஅளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அனைவரும் கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், வஞ்சரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த நாகலூர் காட்டுக்கொட்டகையில் உள்ள ஆசிரியர் குணசேகரன், ஜெகதீசன் வீடுகளில் 97-ம் ஆண்டுநடந்த கொள்ளை சம்பவத்திலும் கணேசன், பெரியசெல்வம், சின்ன செல்வம்,கோவிந்தன், பச்சமுத்து ஆகியோருக்குத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி அசோகன், நாகலூர் கொள்ளை சம்பவம்தொடர்பாக பிச்சமுத்துவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
பிச்சமுத்து ஏற்கனவே 90 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்று அதை சிறையில்கழித்து வருகிறார். இப்போது "போனஸாக 20 ஆண்டுகள் அவருக்குக்கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications