ராஜ்குமார் மனைவியுடன் ரஜினி சந்திப்பு
பெங்களூர்:
பெங்களூர் வந்த நக்கீரன் கோபால் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசி விட்டுப் பின்னர் நடிகர்ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
புதன்கிழமை இரவு பெங்களூர் வந்த இருவரும் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து விட்டு இரவு 9.30 மணிக்கு சதாசிவநகரில் உள்ள ராஜ்குமார்வீட்டுக்குச் சென்றனர். ராஜ்குமார் மனைவி பர்வதம்மா, மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா, புனித் ஆகியோரைச் சந்தித்து பேசினர்.
சுப்ரீம் கோர்ட்டில் தடா கைதிகள் குறித்த வழக்கு தொடர்ந்து நடந்து வருவதால் ராஜ்குமாரின் விடுதலை தாமதமாகிறது. இருப்பினும் ராஜ்குமார்நலமுடன் விரைவில் வீடு திரும்புவார் என்று ராஜகுமார் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த்தும், கோபாலும் நம்பிக்கையூட்டினார்கள்.
தன்னுடைய குடும்பத்தாருக்கு ராஜ்குமார் கொடுத்தனுப்பிய வீடியோ கேசட்டையும் கோபால் கொடுத்தார். ராஜ்குமாரும் அவருடன் கடத்தப்பட்ட அவரதுஉறவினர்கள் 3 பேரும் காட்டில் நலமுடன் இருப்பதாக கோபால், பர்வதம்மாவிடம் எடுத்துக் கூறினார். சுமார் 45 நிமிடம் இந்தச் சந்திப்பு நீடித்தது.












Click it and Unblock the Notifications