"தனித்துப் போட்டியிட பா.ம.க.வுக்குப் பயமில்லை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியும் தனியாகத் தேர்தலை சந்திக்கும்என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க.இணைப் பொதுச்செயலாளர் இளங்கோவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பாட்டாளி மக்கள் கட்சியை வன்னியர் கட்சி என்று இழிவுபடுத்தி பேசுவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. பா.ம.க.வின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத இவர் போன்றவர்கள் அடிக்கடி பா.ம.க.வை தரக்குறைவாகப் பேசி வருவதைபா.ம.க தொண்டர்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
1989 ம் ஆண்டு பா.ம.க. தனியாகத் தேர்தலைச் சந்தித்தது. அப்போது 20 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைத்து சமுதாய மக்களின் அங்கீகாரத்தையும்பெற்றது. வன்னியர்களே இல்லாத பெரியகுளம் தொகுதியில் 96, 000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்து தேர்தலை சந்திக்க தயாரானால் அந்த சூழ்நிலையில் த.மா.க.கடைசியாகத் தேர்தலைச் சந்திக்கும் கட்சியாகஇருக்கும். சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இனிமேலாவது நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொண்டால் நல்லது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications