சிறையிலிருந்து தப்ப இலங்கை அகதிகள் முயற்சி
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் புதன்கிழமை கதவை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்குத் தப்பி வரும் அகதிகள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகளாக வந்ததை முறைப்படிபதிவு செய்யாத பலர், சிறைகளில் டைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மதுரை மாவட்டம் மேலூர் சப்-ஜெயிலில் உள்ளனர்.
இவர்கள் தங்களை வெளியே செல்ல அனுமதிக்கும்படி சிறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்புதன்கிழமை தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயில் கதவை உடைத்துக் கொண்டு தப்பித்து வர முயற்சித்தனர்.
அவர்களைப் பார்த்து விட்ட போலீஸார் உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தாசில்தார் முத்தையா ஜெயிலுக்குச் சென்றுஇலங்கை அகதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications