கொள்கைக்கு எம்.ஜி.ஆர். ... பணத்திற்கு ரஜினி
சென்னை:
எம்.ஜி.ஆர். கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 75-வது பிறந்தநாள்பவள விழா ஞாயிற்றுக்கிழமை மாலை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆர்.எம். வீரப்பன் பேசியதாவது:
என்னுடைய கலைத்துறை வாழ்க்கையின் ஒரு பகுதி எம்.ஜி.ஆர். என்றால் மறுபகுதி சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் ஆவார். எம்.ஜி.ஆர் நடித்து நான் தயாரித்தவை கொள்கைக்காக எடுக்கப்பட்டவை.ஆனால் ரஜினிகாந்த்தை வைத்து நான் எடுத்த படங்களில் தான் நான் நிறைய சம்பாதித்தேன்.
பாட்ஷா படத்திற்கு அவராகவே முன் வந்து கால்ஷீட் கொடுத்து நடித்தார். அதை என்றும் நான்மறக்க மாட்டேன்.
என் தாயார் இறந்த பொழுது புதுக்கோட்டை இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். வந்து கலந்துகொண்டார். புதுக்கோட்டையே என்னைப் பற்றி பேசியது. அதனால் தான் காலமெல்லாம்எம்.ஜி.ஆரின் விசுவாசியாக இருக்கிறேன். அந்த எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்தவர்கலைஞர். என் எஞ்சிய வாழ்நாளில் கலைஞர் அருகே இருந்து கடமையாற்றுவேன்.
தி.மு.க. வுக்கு பெரிய சக்தியாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அந்த தி.மு.க.வுக்கு இப்போது பலம்சேர்க்கவே நான் பாடுபடுகிறேன். எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள் இருக்க வேண்டிய இடம்கலைஞரின் பாசறை தான். தமிழன் கலைஞரோடு போகாமல் வேறு யாரோடு போவது? என்றுபேசினார் ஆர்.எம். வீரப்பன்.












Click it and Unblock the Notifications