ஹிஸ்புல் நிர்வாகத்தைக் கைப்பற்றியது ஜமாத் இ இஸ்லாமி
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின்கட்டுப்பாடு, பாகிஸ்ாதனின் அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி வசம்வந்துள்ளது.
இதுகுறித்த செய்திகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும்பத்திரிகைகளில் வந்துள்ளன. ஹிஸ்புல் அமைப்பின் நிர்வாகத்தை ஜமாத் இ இஸ்லாமிஅமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளன. அகன்றகாஷ்மீரை அடையும் முதல்படியாக இந்த அதிகார மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய நடவடிக்கை மூலம் காஷ்மீருக்கு எதிரான பாகிஸ்தானின் போக்கு மேலும்தீவிரமடையும் என்று நடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இப்போது முதல் ஹிஸ்புல் அமைப்பு தொடர்பான அனைத்து முடிவுகளும், 12உறுப்பினர் கொண்ட காஷ்மீர் கமிட்டி மூலம் மட்டுமே எடுக்கப்படும். இந்தக்கமிட்டிக்கு ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் குவாஸி ஹுசைன் அகமதுதலைமை வகிப்பார்.
பாகிஸ்தானின் மன்சோரா நகரில் நடந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவை ஜமாத் இஇஸ்லாமி எடுத்துள்ளது. ஹூசைன் அகமது கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.இவர்தான், கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் அறிவித்த சண்டை நிறுத்தத்திற்கு கடும்எதிர்ப்புத் தெரிவித்தவர்.
கூட்டத்தில், "காஷ்மீர் விடுதலைக்காக போராடும் அமைப்புகளை ஒன்று சேர்க்கவும்முடிவு செய்யப்பட்டது என்று பத்திரிகைச் செய்திகளில் வெளியாகியுள்ளது..
ஐ.ஏ.என்.எஸ்.