விபத்துக்குள்ளான விமானத்தில் பழுதில்லை - விசாரணை அறிக்கை
டெல்லி:
பாட்னா அருகே விபத்துக்குள்ளான அல்லையன்ஸ் ஏர் விமானத்தில் எந்தப் பழுதும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான 737 போயிங் விமானம் கடந்த ஜூலை 17-ம் தேதி பாட்னா அருகே கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 55 பேர் இறந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் ராஜ் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் பறப்பதற்கு ஏற்றதாகத்தான் இருந்துள்ளது. அதில் பயணம் செய்த 2 விமான ஓட்டிகளும், 4 விமானப் பணிப்பெண்களும்விமானத்தில் ஏறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
பாட்னா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் விமானத்தில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை. இறக்குவதற்கு வசதியாக விமானத்தின்சக்கரங்கள் விமானத்தின் உள்ளேயிருந்து வெளியே வரவில்லை. இதுதான் விபத்துக்குக் காரணமாக இருக்கமுடியும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஒரு விசாரணையின் அறிக்கை மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணையில் ஒளிவுமறைவு இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையிலும், விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள், விபத்து குறித்து தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையிலும் இந் நடவடிக்கையைமேற்கொண்டதாக ராஜ் குமார் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.